யாழ்ப்பாணம் பருத்தித்துறை கிராமக்கோட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அதிவேமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கவரண்டி மீது மோதியதுடன் பேருந்துக்காக காத்திருந்த கூலித்தொழிலாளியான முதியவர் ஒருவரை மோதி அதன் பின்னர் மற்றொரு முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மோதி வீழ்ந்துள்ளது.
சம்பத்தின் போது விபத்தில் சிக்கிய கூலித்தொழிலாளியான முதியவர் கால் உடைந்து அடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்ற இளைஞர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை